3270 M பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

3270 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

by Staff Writer 11-04-2020 | 2:55 PM
Colombo (News 1st) ஆழ்கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 3,270 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்போது 260 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருளும் ஐஸ் என சந்தேகிக்கப்படும் 56 கிலோகிராம் நிறையுடைய போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கமான்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் இலங்கையில் இருந்து 550 கடல்மைல் தொலைவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனைக்குட்படுத்தியபோது இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்போது படகில் இருந்த சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருட்கள் மற்றும் படகுடன் சந்தேகநபர்களை கரைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்