19 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

19 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

by Chandrasekaram Chandravadani 11-04-2020 | 7:52 PM
Colombo (News 1st) கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  இதேவேளை, ஏனைய 19 மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.