வௌிநாட்டு நாணயங்களை வைப்பிலிட புதிய வங்கி கணக்கு

வௌிநாட்டு நாணயங்களை வைப்பிலிடுவதற்கான புதிய வங்கிக் கணக்கு அறிமுகம்

by Staff Writer 11-04-2020 | 7:23 PM
Colombo (News 1st) இலங்கையர்கள் தமது வௌிநாட்டு வருவாயை எந்தவொரு வங்கியிலும் முதலீடு செய்வதற்கும் வைப்பிலிடுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய வங்கிக் கணக்கொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. புதிய வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கு எவ்வித வரையறைகளும் விதிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.