வீதியில் பயணிக்கும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம்

வீதிகளில் பயணிக்கும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது

by Staff Writer 11-04-2020 | 2:48 PM
Colombo (News 1st) பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரப் பிரிவினர், முப்படையினர் மற்றும் பொலிஸார் வீதிகளில் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் காரணமாக அவர்களில் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் மூலம் தொடர்ந்தும் அவர்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.