வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

by Staff Writer 11-04-2020 | 2:31 PM
Colombo (News 1st) களனி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இன்று (11) மாலை 4 மணி முதல் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், களனி, பேலியகொட, வத்தளை, மாபோல, கட்டுநாயக்க - சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் பியகம, மஹர, தொம்பே, கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இன்று மாலை 4 மணி முதல் 12 மணித்தியால நீர்​வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.