விற்பனை நிலையத்தில் தீ ; தந்தையும் மகளும் பலி

பலாங்கொடை விற்பனை நிலையத்தில் தீ ; தந்தையும் மகளும் உயிரிழப்பு

by Staff Writer 11-04-2020 | 3:21 PM
Colombo (News 1st) பலாங்கொடை - கல்கொட பகுதியில் விற்பனை நிலையமொன்றில் இன்று (11) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலில் இருவர் உயிரிழந்துள்ளனர். இது அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 50 வயதுடைய தந்தை மற்றும் 19 வயதுடைய மகள் ஆகியோரே இந்தத் தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர். தீ பரவிய சம்பவம் தொடர்பிலான ​மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.