by Staff Writer 11-04-2020 | 3:48 PM
Colombo (News 1st) ஒரே நாளில் 2,000 இற்கும் அதிக கொரோனா உயிரிழப்புகள் பதிவாகிய முதலாவது நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் 24 மணித்தியாலங்களில் 2,108 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை 18,747 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, 24 மணித்தியாலங்களில் அமெரிக்காவில் 35,098 பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தமாக அங்கு ஐந்து இலட்சத்து இரண்டாயிரத்து 876 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதனிடையே, தென்துருவ நாடுகளில் 1000 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகிய முதலாவது நாடாக பிரேஸில் பதிவாகியுள்ளது.
பிரேஸிலில் 1,074 பேர் உயிரிழந்துள்ளதுடன் 19, 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.