by Staff Writer 10-04-2020 | 3:27 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாழ். சாவகச்சேரியில் திருட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சாவகச்சேரி - மண்டுவில் பிரதேசத்திலுள்ள வீட்டில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் நுழைந்த அடையாளந்தெரியாத இருவர், அங்கிருந்த தங்காபரணங்களை திருடிச்சென்றுள்ளனர்.
சுமார் 4 பவுன் தங்காபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, வீட்டிலிருந்த வயோதிப தம்பதியினரை திருடர்கள் தாக்கியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சாவக்கச்சேரி வைத்தியசாலையிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.