குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

by Staff Writer 10-04-2020 | 5:38 PM
Colombo (News 1st) இன்றைய நாளின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் எந்தவொரு கொரோனா நோயாளர்களும் பதிவாகவில்லையென சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 190 ஆக பதிவாகியுள்ளது. தற்போது 133 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதுவரை நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.