சமலின் பொறுப்பில் குடிவரவு - குடியகல்வு திணைக்களம்

குடிவரவு - குடியகல்வு திணைக்களம் சமல் ராஜபக்ஸவின் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது

by Staff Writer 10-04-2020 | 8:32 PM
Colombo (News 1st) பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட, குடிவரவு - குடியகல்வு திணைக்களம் மகாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அமைச்சு சமல் ராஜபக்ஸவின் கீழ் இயங்குகின்றது. அமைச்சுகளுக்கான விடயங்கள் தொடர்பில், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் திருத்தத்தை மேற்கொண்டு கடந்த 8 ஆம் திகதி வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி ஊடாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்