அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

by Staff Writer 10-04-2020 | 6:48 PM
Colombo (News 1st) இன்று முதல் அமுலாகும் வகையில் அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகார சபை வௌியிட்டுள்ளது. இதற்கமைய, 1 கிலோ கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லரை விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி ஒரு கிலோ 90 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பச்சை அரிசி ஒரு கிலோவின் அதிகபட்ச சில்லறை விலை 85 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.