மின் கட்டணத்தை செலுத்த 30ஆம் திகதி வரை கால அவகாசம்

15,000 ரூபாவிற்கும் குறைந்த மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 30 ஆம் திகதி வரை கால அவகாசம்

by Staff Writer 09-04-2020 | 3:25 PM
Colombo (News 1st) 15,000 ரூபாவிற்கும் குறைந்த மின் கட்டணத்தை செலுத்துவதற்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார். மின் கட்டணத்தை செலுத்துவதற்கு தற்போது எழுந்துள்ள நடைமுறை சிக்கலை கருதி, மின்சக்தி அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மின் கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கான இணைப்புகள் துண்டிக்கப்படாது எனவும் மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.