மன்னாரில் மோட்டார் சைக்கிள் கெப் வண்டியில் மோதி விபத்து: பெண்கள் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 09-04-2020 | 4:10 PM
Colombo (News 1st) மன்னார் - பரப்பான்கண்டல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இன்று பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த பெண்களின் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கட்டையடம்பன் பகுதியை சேர்ந்த பெண்களே உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளொன்று கெப் வண்டியில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. கெப் வண்டியின் சாரதி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிலங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.