by Staff Writer 09-04-2020 | 8:25 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபை நிதியினை வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்க பயன்படுத்துமாறு ஆளுனரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் விசேட அமர்வு தவிசாளர் செ.பிரேமகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த்தாக்கம் தொடர்பில் பிரதேச சபை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
சபையின் நிலையான வைப்பிலிருந்து 12 மில்லியன் ரூபாவை ஆளுனரின் அனுமதியுடன் பெற்று மக்களுக்கு நிவாரணம் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.