சுய தனிமைப்படுத்தலுக்கான விதிகளை மீறிய 23பேர் கைது

சுய தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறி நடமாடிய 23 பேர் கைது

by Staff Writer 09-04-2020 | 3:33 PM
Colombo (News 1st) ஜா -எல - சுதுவெல்ல பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறிய 23 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வு நடவடிக்கையினூடாக இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர். வாடகை வாகன சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையால், அவரை சந்தித்த சிலர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர். சுய தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறி நடமாடியதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்