கொழும்பின் சில பகுதிகளில் இன்றும் நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

by Staff Writer 09-04-2020 | 11:14 AM
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்று(09) பிற்பகல் 01 மணி தொடக்கம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு 9 , 14 மற்றும் நவகம்புர உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் கொழும்பு 13 மற்றும் 15-இற்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது. இன்று பகல் 01 தொடக்கம் நாளை வௌ்ளிக்கிழமை காலை 07 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.