இந்தியாவில் தீவிரமடைந்துள்ள கொரோனா தொற்று

இந்தியாவில் தீவிரமடைந்துள்ள கொரோனா தொற்று

by Bella Dalima 09-04-2020 | 3:48 PM
Colombo (News 1st) இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருகின்றது. மகாராஷ்ட்ரா, தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்கள் தொற்றினால் மிகவும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தியா முழுவதிலும் கடந்த 24 மணித்தியாலங்களில் 540 பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 17 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,734 ஆகவும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 166 ஆகவும் அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 473 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 1,135 பேருக்கும் தமிழகத்தில் 738 பேருக்கும் டெல்லியில் 669 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ராவில் 72 பேரும் குஜராத்தில் 16 பேரும் மத்திய பிரதேஷில் 13 பேரும் டெல்லியில் 9 பேரும் பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் தலா 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.