3,057 மில்லியன் ரூபா நிதி பகிர்ந்தளிப்பு

முதியோர், சிறுநீரக நோயாளிகள், அங்கவீனமுற்றோருக்கு 3057 மில்லியன் ரூபா நிதி பகிர்ந்தளிப்பு

by Staff Writer 08-04-2020 | 3:08 PM
Colombo (News 1st) முதியோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் அங்கவீனமுற்றோருக்கான கொடுப்பனவாக 3057 மில்லியன் ரூபா நிதி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. முதியோர் செயலகத்தினூடாக இந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 25 மாவட்டங்களிலும் உள்ள 4,88,243 பயனாளிகளுக்கு முதியோர் கொடுப்பனவாக 2,441 ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள 32,417 பேருக்கு 162 மில்லியன் ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அங்கவீனமுற்ற 90,870 பேருக்கு 454 மில்லியன் ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவற்றிற்கு அமைய, 83 வீதமான முதியோர், சிறுநீரக மற்றும் அங்கவீனமுற்றோருக்கான நிதி வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.