by Staff Writer 08-04-2020 | 10:09 AM
Colombo (News 1st) இன்று காலை 06 மணி வரையான 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,815 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் 595 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 17,717 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் 4,586 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.