பொருளாதார மத்திய நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை

by Staff Writer 07-04-2020 | 8:28 PM
Colombo (News 1st) முக்கிய பொருளாதார மத்திய நிலையங்கள் சிலவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால், இன்று உற்பத்திகளை எடுத்து வந்த விவசாயிகள் மீண்டும் அவற்றை எடுத்துச்செல்ல நேரிட்டது. பணத்தை செலவிட்டு உற்பத்திகளை எடுத்து வந்தாலும் விற்பனை செய்ய முடியாமற்போனதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தை மூடுமாறு அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறு செய்ய முடியாது என தம்புத்தேகம விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கம் குறிப்பிட்டது. கெப்பெட்டிப்பொல விசேட பொருளாதார மத்திய நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. விசேட கூட்டத்தைத் தொடர்ந்தே இன்று இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.