இலங்கையில் 6ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் 6 ஆவது கொரோனா மரணம் பதிவு

by Staff Writer 07-04-2020 | 10:58 AM
இலங்கையில் கொரொனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இதுவரை நாட்டில் 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 2 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதேவேளை, இதுவரை 42 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளான 134 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.