ஊரடங்கு சட்டத்தை மீறிய 171 பேர் இன்று கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 171 பேர் இன்று கைது

by Staff Writer 06-04-2020 | 3:53 PM
Colombo (News 1st) இன்று காலை 6 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 171 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் 86 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 14,966 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் 3,751 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.