கொரோனா தொற்றிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்

by Staff Writer 05-04-2020 | 2:54 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 02 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர். அதற்கமைய, மொத்தமாக 29 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்வடைந்துள்ளது.​ கொரோனா வைரஸ் தொற்றிய 136 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 273 பேர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளனர். நாட்டில் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்