by Staff Writer 05-04-2020 | 2:54 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 02 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, மொத்தமாக 29 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிய 136 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 273 பேர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
நாட்டில் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.