விளக்கமறியலில் உள்ள 1200 பேருக்கு பிணை

விளக்கமறியலில் உள்ள 1200 பேருக்கு தளர்த்தப்பட்ட நிபந்தனைகளுடன் பிணை வழங்க தீர்மானம்

by Staff Writer 04-04-2020 | 3:32 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 1200 பேருக்கு தளர்த்தப்பட்ட நிபந்தனைகளுடனான பிணை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் T.M.J.W. தென்னக்கோன் குறிப்பிட்டார். சிறு குற்றங்கள் மற்றும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களுக்கே பிணை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஒவ்வொரு சிறைச்சாலைகளிலும் உள்ள இவ்வாறான சந்தேகநபர்கள் விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.