கண்காணிப்பு நிலையங்களிலிருந்து 280 பேர் வௌியேற்றம்

கண்காணிப்பு நிலையங்களிலிருந்து 280 பேர் வௌியேற்றம்

by Staff Writer 04-04-2020 | 3:25 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து 280 பேர் இன்று வௌியேறியுள்ளனர். இரணைமடு , கந்தக்காடு மற்றும் கட்டுகெலியாவ ஆகிய நிலையங்களிலிருந்து இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டும் என மருத்துவர்களால் இவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.