இன்று முதல் யாழில் கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது

by Staff Writer 04-04-2020 | 3:05 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனை இன்று (04) முதல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். மருத்துவ பீடத்துடன் இணைந்து இன்று முதல் PCR சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் யாழ். தாவடி பகுதி தொடர்ந்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தாவடியின் ஒரு பகுதி கடந்த மாதம் 24 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டது.

ஏனைய செய்திகள்