by Staff Writer 03-04-2020 | 3:26 PM
Colombo (News 1st) இன்று (03) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,264 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் 325 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 10,730 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் 2,657 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு , கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய 19 மாவட்டங்களிலும் எதிர்வரும் 6 ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.