கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு

by Staff Writer 02-04-2020 | 3:03 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்பிரகாரம் Covid-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் பாதிக்கப்பட்ட 124 பேர் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளாகிய 21 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனிடையே, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மூவர் உயிரிழந்துள்ளனர். மருதானையைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவர் நேற்றிரவு உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.