வௌிநாட்டவர்களின் விசா காலம் நீடிப்பு

வௌிநாட்டவர்களின் விசா காலம் நீடிப்பு

by Staff Writer 01-04-2020 | 3:45 PM
Colombo (News 1st) நாட்டில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களின் விசா காலம் எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக விமான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை மற்றும் நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசா காலத்தை மேலும் நீடிப்பதற்கான கட்டணத்தை செலுத்துதல், அதனை கடவுச்சீட்டில் பதிவிடுதல் தொடர்பிலான அறிவுறுத்தல்களை எதிர்வரும் நாட்களில் தெரியப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசா பிரிவிற்கு வருகைதருவதை தவிர்க்குமாறு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் காலப்பகுதிக்குள் எவரேனும் நாட்டிலிருந்து வௌியேறும் எதிர்ப்பார்ப்புடன் இருந்தால், விசா காலத்தை நீடிப்பதற்கான கட்டணத்தை மாத்திரம் விமான நிலையத்தில் செலுத்தி நாட்டிலிருந்து செல்ல முடியும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.