3 நாட்களுக்கு மருந்தகங்கள் திறக்கப்படும் - பொலிஸ்

மூன்று நாட்களுக்கு மருந்தகங்கள் திறக்கப்படும் - பொலிஸ்

by Staff Writer 01-04-2020 | 7:58 PM
Colombo (News 1st) ஓய்வூதியம் பெறுவோருக்கான மருந்து கொள்வனவிற்காக நாளை (02), நாளை மறுதினம் (03) மற்றும் எதிர்வரும் 6ஆம் திகதிகளில் அனைத்து மருந்தகங்களும் திறக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, நாளை, நாளை மறுதினமும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளை வங்கிகளுக்கு அழைத்துச்செல்வதற்கு வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.