கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் பட்டதாரிகள்...

பட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தீர்மானம்

by Staff Writer 01-04-2020 | 3:01 PM
Colombo (News 1st) வேலையில்லாத பட்டதாரிகளை, ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை விநியோகித்தல் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான சுற்றுநிரூபம் நேற்று (31) வௌியிடப்பட்டதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. ​இதன்பிரகாரம், வேலையற்ற பட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் விரைவில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார். தற்போது கிராம உத்தியோகத்தர்களுக்கான வேலைப்பளு அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். இதனடிப்படையில், கிராம உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வேலையற்ற பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதன்பிரகாரம் சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பிலான நடவடிக்கை, ஊனமுற்றோர், ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கைகள், கொரோனா தொற்று காரணமாக பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு இவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.