நோயாளர்களுக்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

நோயாளர்கள் தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

by Staff Writer 01-04-2020 | 7:26 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கிளினிக் நோயாளர்கள் தொடர்ச்சியாக மருந்துகளை பெற்றுக்கொள்வதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இன்று (01) இது தொடர்பில் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. கிளினிக் ​நோயாளர்கள் 0653 133 330 மற்றும் 0653 133 331 எனும் இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், டாக்டர். திருமதி கலாரஞ்சனி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். வார நாட்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையான காலப்பகுதியில் அழைப்பினை ஏற்படுத்த முடியும் என அவர் அறிக்கையினூடாக அறிவித்துள்ளார். கிளினிக் நோயாளர்களுக்கு தபால் திணைக்களத்தினூடாக மருந்துகளை அனுப்பிவைக்கும் நடவடிக்கை கடந்த 30 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.