கொரோனா பலி: உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

கொரோனாவினால் உயிரிழந்த 2ஆவது நபரின் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

by Staff Writer 01-04-2020 | 2:54 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் உயிரிழந்த நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்தவரின் உறவினர்கள் 43 பேர், புனானையில் உள்ள தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு அவர்கள் தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனிடையே, தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்ட மற்றுமொரு குழுவினர் இன்று (01) வீடு திரும்பியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். இந்தநிலையில், நாளை (02) மற்றும் நாளை மறுதினம் (02) ஓய்வூதியக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளை வங்கிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய செய்திகள்