காணொளிகளை வௌியிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை

அரச அதிகாரிகள் தொடர்பிலான காணொளிகளை வௌியிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை

by Staff Writer 01-04-2020 | 4:10 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரச அதிகாரிகளின் கடமைகளை விமர்சித்து உண்மைக்கு புறம்பான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்கள் அடங்கிய காணொளிகளை வௌியிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது குறித்து பதில் பொலிஸ் மா அதிபரினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளது. அரச ஊழியர்கள் இழைத்த சிறு தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, அவர்களை தூற்றும் வகையிலான காணொளி இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்