by Staff Writer 31-03-2020 | 3:00 PM
Colombo (News 1st) ஆழ்கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 10,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது 500 கிலோகிராம் நிறையுடைய ஐஸ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மற்றும் 500 கிலோகிராம் நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமான்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.