ஜப்பானிய மருந்துவில்லைகள் கொண்டுவரப்பட்டன

ஜப்பான் வழங்கிய மருந்துவில்லைகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

by Staff Writer 31-03-2020 | 2:32 PM
Colombo (News 1st) கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஜப்பான் வழங்கிய 'எவிகன்' எனப்படும் மருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக எவிகன் எனப்படும் 5000 மருந்து வில்லைகளை ஜப்பான், இலங்கைக்கு வழங்கியுள்ளது. எதிர்காலத்தில் தேவைக்கேற்ப குறித்த மருந்துகள் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.