கொழும்பு பங்குச்சந்தை செயற்பாடுகள் இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச்சந்தை செயற்பாடுகளை நிறுத்த தீர்மானம்

by Staff Writer 31-03-2020 | 3:37 PM
Colombo (News 1st) கொழும்பு பங்குச்சந்தையின் நடவடிக்கைகளை நாளை (01) முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரை நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பங்குச்சந்தையின் செயற்பாடுகள் இன்று (31) ஏழாவது நாளாக முடங்கியுள்ளன. கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகள் இறுதியாக கடந்த 22 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. எனினும், முதலீட்டாளர்களின் வருகையின்மையினால் கொழும்பு பங்குச்சந்தையின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.