கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு

by Staff Writer 31-03-2020 | 4:20 PM
Update: 31.03.2020 / 4.45 PM: கொரோனா நோயாளர்கள் 10 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் Covid-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 16 பேர் குணமமைடந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், தொற்றுக்குள்ளான 104 பேர் வதை்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைத்திய கண்காணிப்பின் கீழ் 173 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 29 சிறுவர்களும் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றினால் இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ------------------------------------------------------------------------------------------------------------------------------ Colombo (News 1st) கொரோனா நோயாளர்கள் மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.