கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்

by Staff Writer 31-03-2020 | 2:38 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் இருவர் இன்று (31) குணமடைந்ததுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. அதனடிப்படையில், நாட்டில் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, நாட்டில் இதுவரை 122 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் 104 பேர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய இருவர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றினால் உயிரிழந்த இரண்டாவது நபரின் இறுதிக்கிரியை நீர்கொழும்பு மாநகரசபை பொது மயானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் 29 சிறுவர்கள் சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.