by Staff Writer 31-03-2020 | 5:47 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தினம் வரை நாட்டை முடக்குவதாக இத்தாலி அறிவித்துள்ளது.
ஆனால், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் குறைவடைந்து வருவதாகவும் இத்தாலி கூறியுள்ளது.
இத்தாலியில் நான்காவது வாரமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலியில் இதுவரை 11,591 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.