ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 809 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 809 பேர் கைது

by Staff Writer 30-03-2020 | 2:33 PM
Colombo (News 1st) இன்று (30) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 809 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காலப்பகுதியில் 166 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். கடந்த 20 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 6,850 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1643 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனிடையே, ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறியுள்ளதாக கடற்படையினர் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.