கண்காணிப்பு முகாம்களிலிருந்து 132 பேர் வௌியேறினர்

கண்காணிப்பு முகாம்களிலிருந்து 132 பேர் வௌியேறினர்

by Staff Writer 30-03-2020 | 2:27 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் முகாம்களில் கண்காணிக்கப்பட்ட மேலும் 132 பேர் இன்று (30) வீடு திரும்பியுள்ளனர். தியத்தலாவை, புனானை உள்ளிட்ட மத்திய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு வீடு திரும்பியுள்ளதாக இராணுவத்தளபதி, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்கள் இத்தாலி, தென் கொரியா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து இலங்கைக்கு திரும்பியவர்களாவர். இதனிடையே, தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களில் தங்கியிருந்த 77 பேர் நேற்று அவர்களது வீடுகளுக்கு திரும்பினர். அவர்களில் சிலர் கல்கந்த தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். தென் கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து நாட்டுக்கு வருகைதந்த குறித்த குழுவினர், மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்டங்களை சேர்ந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.