Covid-19: உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை இன்று

Covid-19: உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை இன்று

by Staff Writer 29-03-2020 | 2:39 PM
Colombo (News 1st) நாட்டில் கொ​ரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 105 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்த இருவர் நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறினர். இதற்கமைய, இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான 199 நோயாளர்கள் வைத்திய கண்காணிப்பில் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேவேளை, அங்கொடை தொற்று ​நோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய ஒருவர் நேற்று உயிரிழந்தார். உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் இன்று (29) மாலை கொட்டிகாவத்த பொது மயானத்தில் இடம்பெறவுள்ளன. தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளின் கீழ் அவரின் இறுதிக் கிரியைகள் முன்னெடுக்கப்படும் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.