கொரோனா தொற்றுக்குள்ளாகிய மற்றொருவர் குணமடைந்தார்

கொரோனா தொற்று: குணமடைந்தோரின் எண்ணிக்கை 10 ஆகியது

by Staff Writer 29-03-2020 | 3:06 PM
Colombo (News 1st) நாட்டில் Covid-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மற்றுமொருவர் குணமடைந்துள்ளார். இதற்கமைய, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா நோயாளர்கள் 115 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் சடலம் இன்று தகனம் செய்யப்பட்டது. பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. தேசிய தொற்று நோயியல் பிரிவிலிருந்து சடலம், கொடிக்காவத்தை பொதுமயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. பூதவுடலை பார்வையிடுவதற்கு உறவினர் ஒருவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். பூதவுடல் தகனம் செய்யப்பட்டதன் பின்னர், சடலத்தை எடுத்துச் சென்ற வாகனத்தில் கிருமி நீக்கம் செய்யப்பட்டது.