ஓய்வூதியம் வழங்கப்படும் திகதி அறிவிப்பு

ஓய்வூதியம் வழங்கப்படும் திகதி அறிவிப்பு

by Staff Writer 29-03-2020 | 5:39 PM
Colombo (News 1st) ஓய்வூதியம் அடுத்த மாதம் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி விசேட செயலணி இன்று எடுத்த தீர்மானத்திற்கமைய இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது. அந்த நாட்களில் பெற முடியாதவர்கள் எதிர்வரும் 6ஆம் திகதி ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இரு வழிமுறைகளில் ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது. தபாலினூடாகவும் வங்கிக் கணக்குகள் வாயிலாகவும் ஓய்வூதியத்தை பயனாளிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.