ஆறு மணி நேரத்தில் 206 பேர் கைது

ஆறு மணி நேரத்தில் 206 பேர் கைது

by Staff Writer 29-03-2020 | 7:36 PM
Colombo (News 1st) இன்று (29) காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 65 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை, ஊரடங்கு சட்டத்தை மீறிய 6,247 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி முதல் இன்று மதியம் 12 மணி வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காலப்பகுதியில் 1533 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஏனைய செய்திகள்