by Staff Writer 28-03-2020 | 8:16 PM
Colombo (News 1st) இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
மாரவில பகுதியை சேர்ந்த குறித்த நோயாளி, சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட ஒருவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவர் உயர் குருதி அழுத்தம் கொண்ட ஒருவர் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.