Covid - 19: இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி

Covid - 19: இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி

by Staff Writer 28-03-2020 | 10:16 PM
Colombo (News 1st) Covid-19 வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு அமெரிக்கா, 1.3 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்துதல், தொற்றுக்குள்ளானவர்களை இனங்காணுதல், அடையாளம் காணப்பட்டவர்களை கண்காணித்தல், தொழில்நுட்ப அதிகாரிகளின் உதவியை பெற்றுக்கொள்ளுதல் ஆகிய செயற்பாடுகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.