by Staff Writer 28-03-2020 | 2:27 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்.
இதன்பிரகாரம், கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 9 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் 106 பேர் கொரோனோ தொற்றுக்குள்ளாகினர்.
இவர்களில் 25 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியிருந்தனர்.
அதேநேரம், களுத்துறை மாவட்டத்தில் 15 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 10 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 9 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதனைத்தவிர கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 199 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.