ஊரடங்கு சட்டத்தை மீறிய 1167 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1167 பேர் கைது

by Staff Writer 28-03-2020 | 2:44 PM
Colombo (News 1st) பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் 1167 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (27) காலை 6 மணி முதல் இன்று (28) காலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காலப்பகுதிக்குள் 260 வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதி வரை 5185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதிக்குள் 1293 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்